Monday, 20th May 2024

ebook தொடர்புக்கு : +91 - 9444983174

நல்லூர்,பொன்முத்து நகரில் மரக்கன்று நடும் விழா: தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,பங்கேற்பு 

ஜுன் 06, 2021 07:30

நல்லூர்: நல்லூர், பொன்முத்து நகர் குடியிருப்போர் நல சங்கம் சார்பில் பொன்பசுமை பூங்கா மைதானத்தில் மரம் கன்று நாடும் விழா நடைபெற்றது. 

விழாவிற்கு சங்க செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். சங்கத்தலைவர் சண்முகம், துணைத்தலைவர் பழனிசாமி முன்னிலைவகித்தனர். விழாவில் தெற்கு தொகுதி க.செல்வராஜ் எம்.எல்.ஏ.,கலந்து கொண்டு மரக்கன்று நட்டு வைத்து பேசினார். 

முன்னதாக விழாவில் கலந்து கொண்டவர்களுக்கு வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டது. பொன்முத்து நகர் பகுதியில் சாக்கடை வசதிகள், குடிநீர், தெரு விளக்கு உள்ளிட்ட வசதிகள் செய்துத்தரகோரி சங்கம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

50-க்கும் மேற்பட்ட மரக்கன்று நடப்பட்டது. விழாவிற்கு தெற்கு மாநகர பொறுப்பாளர் டி.கே.டி.மு.நாகராசன், வடக்கு மாநகர பொறுப்பாளர் தினேஷ்குமார், நல்லூர் பகுதிகளாக செயலாளர் மேங்கோ.பழனிசாமி, மாநகர பொறுப்புக்குழு பிரிண்டிங் க.இரவி, ஈஸ்வரமூர்த்தி, 38-வது வார்டு செயலாளர் ஆறுமுகம், வார்டு செயலாளர்கள் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஹெல்பிங் ஹார்ட் பவுண்டேசன் நிர்வாகிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

தலைப்புச்செய்திகள்